ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல சின்னத்திரை நடிகர் ராகுல் ரவி. மலையாளத்தில் பகத் பாசில், துல்கர் சல்மான் படங்களில் நடித்திருக்கும் இவர், பின்னர் சின்னத்திரைக்கு வந்தார். 'பொன்னம்பிளி' என்ற மலையாளத் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து நடித்த அவர், தமிழில் 'நந்தினி' சீரியல் மூலம் அறிமுகமானார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய, 'சாக்லேட்' என்ற தொடரிலும் இவர் நாயகனாக நடித்தார். கொரோனா பாதிப்பு காரணமாக இத்தொடர் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 'கண்ணான கண்ணே' என்ற தொடரில் நடித்தார்.
கொரோனா காலத்தில் தான் காதலித்து வந்த லட்சுமி நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமண படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த நிலையில் ராகுல் ரவிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து ராகுல் ரவி முன்ஜாமீன் பெற்றிருந்தார். இந்த முன் ஜாமீனுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் ராகுல் ரவி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.