இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
பிரபல நடிகை மற்றும் வீஜேவான ஸ்வர்ணமால்யா ஒரு காலத்தில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த கனவு கன்னியாக வலம் வந்தார். சினிமாவிலும் சின்னத்திரை சீரியல்களிலும் பல முக்கிய ரோல்களில் நடித்து வந்தார். தற்போது திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருக்கும் ஸ்வர்ணமால்யா பரதநாட்டிய பள்ளியை ஆரம்பித்து பரதம் கற்றுக்கொடுத்து வருகிறார்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சோசியல் மீடியா மிகவும் வக்கிரமாக இருப்பதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'சோசியல் மீடியாவில் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. மற்றவருக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பேசினால் 25 பேராவது கழுவி ஊற்றுவார்கள். முகத்தை மூடிக்கொண்டு கோழைத்தனமாக சண்டை போடுகிறார்கள். இளம் வயதினரை இது அதிகம் பாதிக்கிறது. முன்கூட்டியே தப்பாக எடை போட்டு கமெண்ட் செய்கிறார்கள். இப்போது உள்ள காலத்தில் யாருக்கும் தனி மனித ஒழுக்கம் இல்லை. இந்த சமுதாயம் வக்கிரமாக மாறிக்கொண்டு வருகிறது' என்று கூறியுள்ளார்.