பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் |
பிக்பாஸ் சீசன் 7-ல் பிரபல எழுத்தாளரும், நடிகருமான பவா செல்லத்துரை என்ட்ரி கொடுத்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவரும் பிக்பாஸ் வீட்டில் வரிசையாக கதைகள் சொல்லி அசத்தி வந்தார். அவர் மீது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டி புகார் ஒன்றை வைத்தார். சக ஹவுஸ்மேட்டுகளும் அவரை சோம்பேறி என்று கூட கிண்டல் செய்தனர். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள பவா செல்லத்துரை, 'இந்த வீட்டுக்கு வரும் போது சூழ்ச்சிகள் சதிகள் இருக்கும் என்று மட்டும் தான் நினைத்தேன். ஆனால், இங்கு அதிகமாக வன்மம் தான் இருக்கிறது. இங்கிருக்கும் டாஸ்க்குகளை செய்யவும் என் உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்' என்று கூறி வெளியேறிவிட்டாராம். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பவா செல்லத்துரை மீண்டும் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று தங்கள் விருப்பத்தை சோஷியல் மீடியா மூலமாக பிக்பாஸிடம் தெரிவித்து வருகின்றனர்.