இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை பஞ்சாயத்து சென்றது. செல்லம்மா தொடரில் நடித்து வரும் அன்ஷிதா என்ற நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அர்னவ் தன்னை கழட்டிவிட முயற்சிப்பதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் திவ்யா ஸ்ரீதர் புகார் கூறினார். அதேசமயம் திவ்யாவின் குற்றச்சாட்டுக்கு அன்ஷிதா எந்த மறுப்பும் அப்போது சொல்லவில்லை.
அதேசமயம் அர்னவ் அன்ஷிதாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறார். இருவரும் அடிக்கடி ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் தற்போது இருவரும் வெளியிட்டுள்ள ஒரு ரீல்ஸ் வீடியோவில் 'என் சொந்தமெல்லாம் நீதான் என்பது போல்' அன்ஷிதா அர்னவை பிடித்து இழுத்து நெருக்கமாக நின்று போஸ் கொடுத்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும் ரசிகர்கள் திவ்யா ஸ்ரீதர் அர்னவ்-அன்ஷிதா பற்றி கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை தான் என அதிர்ந்து போயுள்ளனர்.