நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை பஞ்சாயத்து சென்றது. செல்லம்மா தொடரில் நடித்து வரும் அன்ஷிதா என்ற நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அர்னவ் தன்னை கழட்டிவிட முயற்சிப்பதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் திவ்யா ஸ்ரீதர் புகார் கூறினார். அதேசமயம் திவ்யாவின் குற்றச்சாட்டுக்கு அன்ஷிதா எந்த மறுப்பும் அப்போது சொல்லவில்லை.
அதேசமயம் அர்னவ் அன்ஷிதாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறார். இருவரும் அடிக்கடி ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் தற்போது இருவரும் வெளியிட்டுள்ள ஒரு ரீல்ஸ் வீடியோவில் 'என் சொந்தமெல்லாம் நீதான் என்பது போல்' அன்ஷிதா அர்னவை பிடித்து இழுத்து நெருக்கமாக நின்று போஸ் கொடுத்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும் ரசிகர்கள் திவ்யா ஸ்ரீதர் அர்னவ்-அன்ஷிதா பற்றி கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை தான் என அதிர்ந்து போயுள்ளனர்.