மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிபோடிக்கான பட்டியலில் அக்ஷயா, ஜீவன் பத்ககுமார்,புருஷோத்தமன், லக்ஷனார் ஆகிய நான்கு பேர் மட்டுமே இதுவரை இடம்பிடித்துள்ளனர். ஆனால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாகார்ஜுனா இடம்பெறவில்லை. நாகார்ஜுனா ஏழ்மையான மீனவ குடும்பத்தில் பிறந்தவர். லுங்கி அணிந்து மேடையேறிவர். கேள்வி ஞானத்தில் மட்டுமே பாடல் பாடும் திறமையை வளர்ந்து கொண்டவர். அதேசமயம் அவர் பாடுவதை பார்த்து ஹரிஹரன் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களே அசந்து போய் பாராட்டியுள்ளனர். மேலும், மக்களின் ஆதரவும் அதிகம் இருக்கிறது.
இந்நிலையில், அவர் பைனல் லிஸ்ட் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பது மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியொரு நபர் இந்த அளவிற்கு வெற்றி பெற்று வந்திருக்கிறார் என்றால் அதற்காகவே அவருக்கு பைனலில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கலாம்! என மக்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நாகார்ஜுனா பைனலில் பாடுவாரா? இல்லையா? என்பது குறித்து இதுவரை சரிவர தெரியவில்லை என்றாலும், 5-வது பைனலிஸ்டாக அவர் கட்டாயம் இடம்பெறுவார் என மக்கள் நம்பி வருகின்றனர்.




