பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
"காதலே நிம்மதி" படத்தில் அறிமுகமான சங்கீதா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்தார். தமிழில் சில படங்களில் நடித்தாலும், "பிதாமகன்" படத்தில் கஞ்சா வியாபாரியாக நடித்ததுதான் அவருக்கு பெரிய ரீ-என்ட்ரியை கொடுத்தது. அதன் பிறகு "உயிர்" படத்தில் கொழுந்தனை விரும்பும் அண்ணி கேரக்டரிலும், "தனம்" படத்தில் பாலியல் தொழிலாளி கேரக்டரிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 2009ம் ஆண்டு தன்னை விட வயது குறைவான பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு குழந்தைக்கு தாய். தமிழில் இவர் நடித்த "புத்திரன்", தெலுங்கில் "துர்கா" ஆகிய படங்கள் வெளிவரவேண்டியது இருக்கிறது.
குழந்தைக்கு ஒரு வயது ஆகிவிட்ட நிலையில் சங்கீதா இப்போது சின்னத்திரையின் பக்கம் வந்திருக்கிறார். "ஜீ தெலுங்கு" தொலைக்காட்சி நடத்தும் "பிந்தாஸ்" என்ற தெலுங்கு கேம் ஷோவை தொகுத்து வழங்குகிறார். விரைவில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆர்வம் இல்லை என்று கூறியிருக்கிறார்.