ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

முள்ளும் மலரும் என்ற டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் ஷாலினி. இவர் சூப்பர் மாம் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து உள்ளார். ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷாலினிக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கணவர் ரியாசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்தனர். இந்நிலையில் ஷாலினிக்கு தற்போது விவாகரத்து கிடைத்திருக்கிறது. அதையடுத்து அதை போடோ சூட் நடத்தி உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், ‛‛குரல் அற்றவர்களாக தங்களை உணர்பவர்களுக்கு விவாகரத்து பெற்ற பெண்ணின் செய்தி இது. மோசமான திருமணத்தை விட்டு விடுவது பரவாயில்லை. காரணம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர்கள். உங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் . உங்களது வாழ்க்கையை கட்டுப்படுத்தி உங்களுக்காகவும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் தேவையான மாற்றங்களை செய்வதற்கு தயாராகிக் கொள்ளுங்கள். விவாகரத்து ஒன்றும் தோல்வி அல்ல. உங்களுக்கு வாழ்க்கையில் நேர்மையான மாற்றங்களை உருவாக்க வழிவகுக்கும் திருப்பு முனை. இந்த திருமணத்தை விட்டு வெளியேறுவதற்கு பெரிய அளவில் தைரியம் தேவை. தனித்து நில்லுங்கள். என்னைப் போன்ற துணிச்சலான பெண்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்'' என்று பதிவிட்டு இருக்கிறார் சீரியல் நடிகை ஷாலினி.