பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கலர்ஸ் தமிழ் சேனலில் 'இதயத்தை திருடாதே' தொடரின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நவீன், செய்தி வாசிப்பாளரான கண்மணியை திருமணம் செய்து கொண்டார். தற்போது கண்மணி கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் இந்த க்யூட் ஜோடிக்கு க்யூட்டான குழந்தை பிறக்கவுள்ளது. இந்நிலையில், நவீன் - கண்மணி இருவரும் 'கொட்டா காபி' என்ற டீக்கடையை ஆரம்பித்துள்ளனர். இதற்காக இரண்டு வருடம் பெயர் மட்டும் யோசித்ததாகவும், இது தங்களுடைய கனவு என்றும் கூறியுள்ளனர்.
ஒருபுறம் கர்ப்பமாக இருப்பதால் செய்தி சேனல் பக்கம் கண்மணி தலைக்காட்டுவதில்லை. அதேபோல் நவீனும் 'கண்ட நாள் முதல்' சீரியலுக்கு பிறகு எந்தவொரு ப்ராஜெக்டிலும் கமிட்டானதாக தெரியவில்லை. அப்படியிருக்க தற்போது அவர்கள் பிசினஸுக்குள் குதித்திருப்பது நல்ல ஒரு பேக்-அப் ப்ளான் என பலரும் பாராட்டி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.