சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
கலர்ஸ் தமிழ் சேனலில் 'இதயத்தை திருடாதே' தொடரின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நவீன், செய்தி வாசிப்பாளரான கண்மணியை திருமணம் செய்து கொண்டார். தற்போது கண்மணி கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் இந்த க்யூட் ஜோடிக்கு க்யூட்டான குழந்தை பிறக்கவுள்ளது. இந்நிலையில், நவீன் - கண்மணி இருவரும் 'கொட்டா காபி' என்ற டீக்கடையை ஆரம்பித்துள்ளனர். இதற்காக இரண்டு வருடம் பெயர் மட்டும் யோசித்ததாகவும், இது தங்களுடைய கனவு என்றும் கூறியுள்ளனர்.
ஒருபுறம் கர்ப்பமாக இருப்பதால் செய்தி சேனல் பக்கம் கண்மணி தலைக்காட்டுவதில்லை. அதேபோல் நவீனும் 'கண்ட நாள் முதல்' சீரியலுக்கு பிறகு எந்தவொரு ப்ராஜெக்டிலும் கமிட்டானதாக தெரியவில்லை. அப்படியிருக்க தற்போது அவர்கள் பிசினஸுக்குள் குதித்திருப்பது நல்ல ஒரு பேக்-அப் ப்ளான் என பலரும் பாராட்டி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.