'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஊடகங்களில் பிரபலமான வீஜே பார்வதிக்கு இளைஞர்கள் ரசிகர்கள் அதிகம். ராவான ரவுடி பேபியாக எந்தவொரு விஷயத்திலும் ஓப்பனாக தைரியமாக பேசுவதால் பலருக்கும் இவர் பேவரைட்டாக இருக்கிறார். அடிக்கடி எங்காவது டூர் சென்று அங்கு தனக்கு கிடைத்த அனுபவங்களை வீடியோவாகவும், சோஷியல் மீடியா போஸ்ட்டாகவும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் எக்ஸோடிக் பெட்ஸ் என அழைக்கப்படும் மிக அரிதான செல்லபிராணிகள் விற்கும் பண்ணைக்கு வீஜே பாரு அண்மையில் விசிட் அடித்துள்ளார். அங்கே, செல்லபிராணிகளாக வளர்க்கப்படும் அனகோண்டா பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டும் கையில் பிடித்தவாறும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். சில மிருகங்களை பெண்கள் பார்த்தாலே பயந்து ஓடுவர். ஆனால் பார்வதியோ, அந்த செல்லபிராணிகளுடன் பாசமாக கொஞ்சி விளையாடுகிறார். பாம்புகளுடனும் ஓணான்களுடனும் பயமின்றி விளையாடும் இவரின் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.