சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
தொலைக்காட்சி சேனல்கள் டிஆர்பி போட்டிக்காக நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் அவ்வப்போது சில தரக்குறைவான தந்திரங்களை செய்வது வழக்கம். பல நல்ல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் விஜய் டிவியும் சில சமயங்களில் இதற்காக கண்டனங்களை வாங்கியுள்ளது. அந்த வகையில் டிஜே ப்ளாக் எனும் நபரை வைத்து விஜய் டிவி நிகழ்ச்சிகள் சில மட்டமான புரொமோஷன் வேலைகளை செய்து வருகின்றனர்.
முன்னதாக 'ஊ சொல்றியா ஊஊ சொல்றியா' என்ற நிகழ்ச்சியில் நடிகை ரோஜா ஸ்ரீ, டிஜே ப்ளாக்கை காதலிப்பது போலவும், அதை டிஜே ப்ளாக் மறுத்துவிட ரோஜா ஸ்ரீ வருத்தத்துடன் இருப்பது போலவும் ஒரு சோகக்கதையையே சில நாட்கள் ஓட்டினார்கள். இந்த விவகாரமானது அந்நிகழ்ச்சியை தாண்டியும் மற்ற ஊடக பேட்டிகளிலும் பிரதிபலித்தது. கடைசியாக டிஜே ப்ளாக் அந்நிகழ்ச்சியிலேயே ரோஜா ஸ்ரீயை அக்கா என கூறி பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.
அந்த பரபரப்பு அடங்கி சில நாட்களே ஆனது. அதற்குள் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகி பூஜாவுக்கு டிஜே ப்ளாக் ரூட் விடுவது போலவும் அதை நிகழ்ச்சிக்கு வந்த பூஜாவின் அம்மா கண்டிப்பது போலவும் டிராமாவை நிகழ்த்தியுள்ளனர். ஆனால், அது வெறும் ப்ராங்க் தான். தற்போது இந்த சம்பவத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் பாடகி பூஜா தனது இண்ஸ்டாகிராமில் மன்னிப்பு கேட்டுள்ளார். டிஜே ப்ளாக்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'ப்ராங்கை அனைவரும் என்ஜாய் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால் மன்னித்துவிடுங்கள்' என்று போட்டுள்ளார். இதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் சிலர் 'டிஜே ப்ளாக்கை இதுக்குதான் வச்சுருக்கீங்களா! இப்படிதான் உங்க டிஆர்பிய கூட்டனுமா?' என விஜய் டிவியை கலாய்த்து வருகின்றனர்.