'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சந்தோஷ் எழுதி இயக்கி, தாணு தயாரிப்பில் வெளிவந்த படம் கணிதன். இந்த படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்திருந்தார். அதர்வா, கேத்ரின் தெரசா, கே.பாக்யராஜ், ஆடுகளம் நரேன், மனோபாலா மற்றும் கருணாகரன், தருண் அரோரா உள்பட பலர் நடித்திருந்தனர்.
தொலைக்காட்சியில் பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் அதர்வா, பிபிசியில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததற்காக கைது செய்யப்படுகிறார். தனது கல்வி ஆவணங்கள் பொய்யானவை என்பதை அறிந்த அதர்வா அதற்கு காரணமானவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
2016ம் ஆண்டு வெளியான இந்தப் படம் 7 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக நாளை (29ம் தேதி) கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இதுகுறித்து இயக்குனர் சந்தோஷ் கூறும்போது “படம் வெளியானபோது பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைக்கதையில் இதுபோன்ற இருண்ட உண்மைகளை மக்களுக்கு மத்தியில் வெளிக்கொணர்வது சவாலானது ஆகும். சில சுவாரஸ்யமான துப்புகளுக்கு வழிவகுக்கும் எலியும் பூனையுமாக துரத்தி கொண்டு செல்வது பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்றார்.