ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் |
சந்தோஷ் எழுதி இயக்கி, தாணு தயாரிப்பில் வெளிவந்த படம் கணிதன். இந்த படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்திருந்தார். அதர்வா, கேத்ரின் தெரசா, கே.பாக்யராஜ், ஆடுகளம் நரேன், மனோபாலா மற்றும் கருணாகரன், தருண் அரோரா உள்பட பலர் நடித்திருந்தனர்.
தொலைக்காட்சியில் பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் அதர்வா, பிபிசியில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததற்காக கைது செய்யப்படுகிறார். தனது கல்வி ஆவணங்கள் பொய்யானவை என்பதை அறிந்த அதர்வா அதற்கு காரணமானவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
2016ம் ஆண்டு வெளியான இந்தப் படம் 7 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக நாளை (29ம் தேதி) கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இதுகுறித்து இயக்குனர் சந்தோஷ் கூறும்போது “படம் வெளியானபோது பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைக்கதையில் இதுபோன்ற இருண்ட உண்மைகளை மக்களுக்கு மத்தியில் வெளிக்கொணர்வது சவாலானது ஆகும். சில சுவாரஸ்யமான துப்புகளுக்கு வழிவகுக்கும் எலியும் பூனையுமாக துரத்தி கொண்டு செல்வது பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்றார்.