லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் 'கேளடி கண்மணி', 'மகராசி', 'கல்யாண பரிசு' ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். சிறிய இடைவேளைக்கு பின் தற்போது 'செவ்வந்தி' தொடரில் நடித்து வருகிறார். திவ்யா ஸ்ரீதருக்கும் அவரது கணவர் அர்னவுக்கும் இடையேயான பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்த நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திவ்யா ஸ்ரீதர் தற்போது கர்ப்பமாக இருந்து வரும் சூழலில் அவருக்காக 'செவ்வந்தி' சீரியல் குழுவினர் மினி வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.
அதன் வீடியோவை சக நடிகை ஷிவான்யா சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார். முன்னதாக இதேபோல் 'மகராசி' சீரியல் குழுவினரும் திவ்யாவுக்கு வீட்டில் வைத்தே மினி வளைகாப்பை செய்திருந்தனர். காதலுக்காக பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திவ்யாவுக்கு, இன்று கணவரின் ஆதரவும் கிடைக்கவில்லை. எனினும் அவரை சக நடிகர்கள் பாசத்துடன் பார்த்துக்கொள்வதை பார்த்து ரசிகர்களும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.