நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வன் நீண்ட இடைவெளிக்கு பின் அருமையான கதையுடன் மீண்டும் சீரியல் உலகை கலக்கி வருகிறார். 'கோலங்கள்' சீரியலை இயக்கி பிரபலமான அவர் தற்போது 'எதிர்நீச்சல்' சீரியலை இயக்கி வருகிறார். கோலங்கள் தொடரில் கதாநாயகி மற்றும் இதர பெண்களின் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பல குடும்ப பெண்களை கவர்ந்தது. தற்போது எதிர்நீச்சல் தொடரும் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பான கதையம்சத்துடன் பல தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த் எதிர்நீச்சல் சீரியல் குறித்து பெருமையாக பேசியுள்ளார். இயக்குநர் திருச்செல்வத்தின் நண்பர், ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இதன் மூலம் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ரஜினிகாந்தை திருச்செல்வம் சந்தித்து பேசியுள்ளார். அப்போது 'எதிர்நீச்சல் சீரியல் தான் எனக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த சீரியலை எனது குடும்பத்தினர் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்' என்று கூறி ரஜினிகாந்த் திருச்செல்வத்தை பாராட்டியுள்ளார். இந்த சம்பவத்தை இயக்குநர் திருச்செல்வமே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.