ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரையின் வளர்ந்து வரும் நடிகையான ஸ்ரீநிதி சர்ச்சையான கருத்துகளை பேசியிருந்தார். இதனால் ஏற்பட்ட சிக்கலால் அவர் சீரியல்களிலும் நடிப்பதாக தெரியவில்லை. தற்போது கவுன்சிலிங்கிற்கு பிறகு சமூகவலைதளத்தில் மீண்டும் ஆக்டிவாகியுள்ள அவர் பாசிட்டிவான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். ஸ்ரீநிதியின் தந்தை சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஸ்ரீநிதியையும் அவர் அக்காவையும் அவரது தாயார் தான் தனியாக வளர்த்துள்ளார்.
இந்நிலையில், தற்போது தனது குழந்தைப்பருவத்தின் போது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஸ்ரீநிதி, 'அப்பா இனி உங்களை மிஸ் செய்யவே மாட்டேன். நீங்கள் என்னுடனேயே இருப்பதை உணர்கிறேன். லவ் யூ அப்பா' என பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீநிதியின் இந்த பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது தற்போதைய நிலையை கண்டு வருத்தப்படும் ரசிகர்கள் சிலர் ஸ்ரீநிதிக்கு ஆதரவான வார்த்தைகளை கமெண்ட் பாக்சில் உதிர்த்து வருகின்றனர். மேலும், ஸ்ரீநிதி விரைவில் சீரியலில் கம்பேக் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.