துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சின்னத்திரை வரலாற்றில் இதுவரை பார்த்திராத அளவில் 4 மணி நேர சீரியல் கிளைமாக்ஸ் ஜீ தமிழில் ஒளிபரப்ப உள்ளனர். ஜீ தமிழின் நம்பர் 1 சீரியலாக பிரபலமான 'செம்பருத்தி' தொடர் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 1420 எபிசோடுகளை கடந்துள்ள இந்த தொடர் வருகிற ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜூலை 31 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் மாலை 5 மணியுடன் நிறைவு பெறும். மேலும், நேயர்கள் எதிர்பார்த்திராத வகையில் 16 திருப்பங்களுடன் ஜீ தமிழின் மற்ற சீரியல்களின் கதாநாயகிகளும் இந்த பிரம்மாண்ட கிளைமாக்ஸில் பங்கேற்க உள்ளனர். இதனால் செம்பருத்தி தொடரின் கிளைமாக்ஸ் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.