ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காக சீரியலை விட்டு விலகினார். சின்னத்திரை ஜோடிகளில் சஞ்சீவ் - ஆல்யா ஜோடிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள ஆல்யா, இன்ஸ்டாவில் அடிக்கடி எதாவது அப்டேட் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு சென்றுள்ள அவர், தனது மகள் அய்லாவுடன் ஒரு மால் வளாகத்தில் யானை சிலைகளுக்கு முன் நின்று புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் குழந்தை அய்லா, ஆல்யா செய்வது போலவே அழகாக போஸ் கொடுத்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் 'நூலை போல சேலை, தாயை போல பிள்ளை, ஆல்யா போல அய்லா' என பழமொழி சொல்லி கொஞ்சி வருகின்றனர்.




