மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காக சீரியலை விட்டு விலகினார். சின்னத்திரை ஜோடிகளில் சஞ்சீவ் - ஆல்யா ஜோடிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள ஆல்யா, இன்ஸ்டாவில் அடிக்கடி எதாவது அப்டேட் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு சென்றுள்ள அவர், தனது மகள் அய்லாவுடன் ஒரு மால் வளாகத்தில் யானை சிலைகளுக்கு முன் நின்று புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் குழந்தை அய்லா, ஆல்யா செய்வது போலவே அழகாக போஸ் கொடுத்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் 'நூலை போல சேலை, தாயை போல பிள்ளை, ஆல்யா போல அய்லா' என பழமொழி சொல்லி கொஞ்சி வருகின்றனர்.