நான் நடிக்க ஆசைப்பட்டேன், சூரி நடிக்கப் போகிறார் : சசிகுமார் | டாக்சிக்கால் கடும் சர்ச்சை : இன்ஸ்டாகிராம் விட்டு விலகிய 'டாக்சிக்' நடிகை | அனுமதி பெற்றே சிரஞ்சீவி படத்தில் இளையராஜா பாடல் | 2026 : ஓடிடியில் நேரடியாக வெளியான முதல் படம் 'அனந்தா' | பொங்கல் போட்டியில் விலகிய 'திரௌபதி 2, ஜாக்கி' | ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு |

வானத்தை போல சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்து வந்தவர் ஸ்வேதா கெல்கே. பெங்களூரை சேர்ந்த ஸ்வேதா ஐடி துறையில் வேலைப்பார்த்து கொண்டிருந்தார். அதன்பின் சினிமா துறையில் கால்பதித்த அவர், சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால், திடீரென வானத்தை போல சீரியலை விட்டு விலகினார். இதற்கான காரணம் புரியாத நிலையில் ஸ்வேதாவை இனி பார்க்கவே முடியாதா? என ரசிகர்கள் வருந்தமடைந்தனர். இந்நிலையில் தற்போது ஸ்வேதா கெல்கே தமிழ் சின்னத்திரையில் புது சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ள செய்தியால் அவரது ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.
ஸ்வேதா கெல்கே கலைஞர் டிவியில் புதிதாக உருவாகி வரும் 'கண்ணெதிரே தோன்றினாள்' என்ற தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் கேஜிஎப் நடிகை மாளவிகா, 'எதிர்நீச்சல்' தொடரில் நடித்து வரும் அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த தொடருக்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'கண்ணெதிரே தோன்றினாள்' வருகிற ஜூன் முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.