ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் பற்றிய விமர்சனம், 'பெத்தி' இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? |

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இது ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவான படம். அதாவது வெவ்வேறு கதைகள் ஆனாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். இந்த படத்தை விஷால் வெங்கட் இயக்கி இருந்தார், மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தர், ரதான் இசை அமைத்திருந்தார்.
இதில் அசோக் செல்வன், நாசர், மணிகண்டன், அபி ஹசன், ரேயா, கே.எஸ்.ரவிகுமார், ரித்விகா, அஞ்சு குரியன், பானுப்ரியா, இளவரசு, அபிஷேக், ரிஷிகாந்த் உள்பட பலர் நடித்திருந்தார்கள். மாறுபட்ட வெவ்வேறு நிலைகளிலிருக்கும் நான்கு நபர்களின் வாழ்க்கை மீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு சாலை விபத்தை மையப்புள்ளியாகக் கொண்டு உருவான கதை. நாளை (ஞாயிறு) மாலை 5.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.