ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான சரண்யா துராடி, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஆரம்பத்தில் சில சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். ஆனால், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சின்னத்திரைக்கு வந்தார். விஜய் டிவியின் 'நெஞ்சம் மறப்பதில்லை', 'ஆயுத எழுத்து', 'வைதேகி காத்திருந்தாள்' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடிக்க ஆரம்பித்த புதிய தொடரான வைதேகி காத்திருந்தாள் ஆரம்பித்த வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. மேலும், அவர் நடித்த அனைத்து சீரியல்களுமே வெவ்வேறு காரணங்களுக்காக விரைவிலேயே முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், சரண்யா தற்போது தொகுப்பாளினி அவதாரம் எடுத்து புது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ஆஹா கல்யாணம் என்ற நிகழ்ச்சியை வீஜே விஜய்யுடன் இணைந்து சரண்யா துராடி தொகுத்து வழங்கவுள்ளார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஜீ தமிழின் முக்கிய சீரியல்களில் ஒன்றான செம்பருத்தி தொடரில் முதலில் பார்வதியாக நடிக்க வேண்டியவர் சரண்யா தான். ஆனால், விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தால் செம்பருத்தி வாய்ப்பை விட்டுவிட்டார். தற்போது ஜீ தமிழுக்கு வந்திருக்கும் சரண்யா மிக விரைவில் புதிய சீரியலில் கமிட்டாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




