ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஹிட் தொடர்களில் ஒன்று செந்தூரப்பூவே. நடிகர் ரஞ்சித், ஸ்ரீநிதி மேனன், தர்ஷா குப்தா மற்றும் ப்ரியா ராமன் ஆகியோர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். தொடக்கத்தில் சுவாரசியமாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் போக போக போக அதன் சுவாரஸ்யம் குறைந்தது.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மீண்டும் ஒளிபரப்ப தொடங்கிய இந்த தொடர் டிஆர்பியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. எனவே, தொலைக்காட்சி நிறுவனம் செந்தூரப்பூவே தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு போட்டு முடித்து வைக்கவுள்ளதாகவும், அதே டைம் ஸ்லாட்டில் புதிய தொடர் ஒன்றை ஒளிபரப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவால் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ள 'சிப்பிக்குள் முத்து' என்கிற புதிய தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.