இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'வித்யா நம்பர் 1' தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இனியன் மற்றும் தேஜஸ்வினி கவுடா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஹீரோ இனியனுக்கு சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் சிறிதுகாலம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகுகிறார். அவருக்கு பதிலாக புவியரசு இனி சஞ்சய் கேரக்டரில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புவியரசு நடித்த காட்சிகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என தெரியவருகிறது.
புவியரசு முன்னதாக ஜீ தமிழில் ஒளிபரப்பான 'அழகிய தமிழ் மகள்', 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.