'2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு |
பிரபல கானா பாடகியான இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழகத்தில் மூலைமுடுக்குகளில் கூட பிரபலமானார். இசைவாணியில் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை சதீஷ் என்ற கானா பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் எழவே அவரை விட்டு பிரிந்துவிட்டார். தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இசைவாணி தற்போது முன்னாள் கணவர் சதீஷ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், 'சதீஷ் என்னுடைய பெயரில் போலி சமூக வலைத்தள கணக்கை தொடங்கி மோசடி செய்து வருகிறார். என் பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு முன்தொகை வாங்கியுள்ளார். இதை தட்டிக்கேட்டால், அப்படிதான் செய்வேன், உன்னால் என்ன செய்ய முடியும் என தகாத வார்த்தைகளில் திட்டுவதோடு, நீ கச்சேரிக்கு செல்லும்போது உன் மீது ஆசிட் வீசுவேன். கொலை செய்வேன் என மிரட்டுகிறார்' என்று அதில் தெரிவித்துள்ளார்.