குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து |

மியூசிக் சேனல் ஒன்றில் 'கட்டம் என்ன சொல்லுது' என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார் அனன்யா. அதன்பின் கலர்ஸ் தமிழ் சேனலில் வந்தாள் மஹாலட்சுமியே என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் பலரும் அறிந்த பிரபலமாக உருவெடுத்தார். இவரது சிரித்த முகத்திற்கும் கலகலப்பான பேச்சுக்கும் பலரும் ரசிகர்களாக உள்ளனர். சீரியல் முடிந்து விட்ட நிலையில் பலரும் அனன்யாவின் அடுத்த ப்ராஜெக்ட் குறித்த அப்டேட்டினை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அனன்யாவோ தற்போது ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறேன் என டாட்டா காட்டிவிட்டார்.
அனன்யா, தமிழ் என்பவரை காதலித்து வருகிறார். தமிழ் ஆஸ்திரேலியாவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். லவ் கம் அரேன்ஜ் மேரேஜாக மாப்பிள்ளையின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சியில், அனன்யா-தமிழ் திருமணம் எளிமையாக நடைபெற்றுள்ளது. கல்யாணத்தை சிம்பிளாக ப்ளான் செய்ததால் அனன்யா தனது மீடியா நண்பர்களை அழைக்கவில்லையாம். ஆனால், அவரது திருமண புகைப்படங்களும், மாலை மாற்றும் விளையாட்டும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு பின் அனன்யா ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில் இனி அவர் பிறகு நடிக்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது.