படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
தென்னிந்திய மொழிகளில் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நடிகை நேஹா கவுடா. பெங்களூரை சார்ந்த நேஹா கவுடா ஒரு தியேட்டர் நடிகை. எனவே, அவருக்கு சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு எளிதாக கிடைத்தது. தமிழ் சின்னத்திரையில் கல்யாண பரிசு சீரியலின் மூலம் அறிமுகமான நேஹாவை, தமிழ் ரசிகர்களிடம் அதிகமாக கொண்டு சேர்த்த சீரியல் விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியல் தான்.
இந்நிலையில் நேஹாவின் காதல் கதை தமிழ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. கலர்ஸ் கன்னடா டிவியில் நடன போட்டியில் சாந்தனும் - நேஹா கவுடாவும் பங்கேற்றிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நேஹா, 'நானும் சாந்தனும் பள்ளியிலிருந்து நல்ல நண்பர்கள், அவர் என்னிடம் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே காதலை சொல்லிவிட்டார். முதலில் எனக்கு அது பிடிக்கவில்லை. அதன்பிறகு விரைவிலேயே இருவரும் காதலர்களாக மாறிவிட்டோம்' என கூறியுள்ளார். நேஹா - சாந்தன் ஜோடிக்கு 2018 ஆம் ஆண்டிலேயே திருமணம் முடிந்துவிட்டது. கன்னட தொலைக்காட்சிகளில் ஜோடியாக சுற்றி வரும் இவர்கள் இருவருக்கும் தற்போது தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.