ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
விஜய் டிவி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட மா.கா.பா.வின் மனைவி அவரது ரகசியங்களை போட்டுடைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவர் மா.கா.பா ஆனந்த். தொடர்ந்து பல வருடங்களாக விஜய் டிவியின் தவிர்க்க முடியாத சின்னத்திரை ஆளுமையாக இருந்து வருகிறார். அவர் தனது மனைவி சூசனுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சவுண்ட் பார்ட்டி' என்கிற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார். நவம்பர் 21 அன்று ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் சூசனிடம் மாகாபா ஆனந்த் குறித்து வெளியுலகுக்கு தெரியாத விஷயத்தை சொல்லுமாறு தீபக் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் சூசன், 'தப்பே செய்யலனாலும் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார்' என்று சூசன் சொல்கிறார். இந்த வீடியோ மாகாபா ஆனந்தின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.