விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | ‛96' இரண்டாம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதனா : பிரேம் குமார் மறுப்பு | ‛லப்பர் பந்து' ரீமேக்கில் ஷாருக்கானா : சுவாசிகா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷ் உடன் மோதும் அதர்வா? |
பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்திலேயே வெளியேறிய அபிஷேக் ராஜா மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வருகை தந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்திலேயே அபிஷேக் வெளியேற்றப்பட்டார். அபிஷேக்கின் செயல்களால் அவர் பிக்பாஸ் வீட்டில் விஷப்பூச்சி என்றே அழைக்கப்பட்டார். அபிஷேக் சென்றபின்பு சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகிய போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். இந்த கால இடைவெளியில் அபிஷேக் நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் யார் எப்படி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று உள்ளே இருந்தபோதும், அதன் பிறகு வெளியே சென்ற பின்பும் உன்னிப்பாக கவனித்து வைத்திருப்பார். இந்நிலையில் மீண்டும் அவர் பிக் பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக நுழைந்திருப்பது மற்ற போட்டியாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வார லட்சுரி பட்ஜெட்டிற்கு தேவையான பொருட்களை பிக் பாஸ் போட்டியாளர்கள் எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று அபிஷேக் ராஜா வருகை தந்தது சக போட்டியாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.