இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
அன்பே வா சீரியல் முடியப்போகிறது என கடந்த சில தினங்களாக செய்தி பரவி வந்த நிலையில் அது உண்மை இல்லை என அதில் நடித்து வரும் நடிகை விளக்கம் கொடுத்துள்ளார்.
முன்னணி டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று அன்பே வா. பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் முக்கிய வில்லி கதாபாத்திரமான பூமிகாவின் மாமியார் திருந்திவிடுகிறார். மேலும், வருணுக்கும் பூமிகாவிக்கும் இடையே நீண்ட நாட்களாக மறைந்திருந்த உண்மையும் வெளிவந்து விடுகிறது. 300 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள அன்பே வா தொடரில் இரண்டு முக்கியமான பிரச்னைகள் அடுத்தடுத்து சரியானது போல் காட்சிபடுத்தபட்டுள்ளது. எனவே அன்பே வா சீரியல் தொடர்ந்து எப்படி நகரப் போகிறது என்ற கேள்வியுடன் பலரும் இந்த சீரியல் முடிந்து விடும் என பேசி வந்தனர்.
இந்நிலையில் இந்த தொடரில் நடித்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவரான ஹேமதயாள் அன்பே வா சீரியல் முடியவில்லை. பல திருப்பங்களுடன் மீண்டும் ஜொலிக்க போகிறது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.