பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
அன்பே வா சீரியல் முடியப்போகிறது என கடந்த சில தினங்களாக செய்தி பரவி வந்த நிலையில் அது உண்மை இல்லை என அதில் நடித்து வரும் நடிகை விளக்கம் கொடுத்துள்ளார்.
முன்னணி டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று அன்பே வா. பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் முக்கிய வில்லி கதாபாத்திரமான பூமிகாவின் மாமியார் திருந்திவிடுகிறார். மேலும், வருணுக்கும் பூமிகாவிக்கும் இடையே நீண்ட நாட்களாக மறைந்திருந்த உண்மையும் வெளிவந்து விடுகிறது. 300 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள அன்பே வா தொடரில் இரண்டு முக்கியமான பிரச்னைகள் அடுத்தடுத்து சரியானது போல் காட்சிபடுத்தபட்டுள்ளது. எனவே அன்பே வா சீரியல் தொடர்ந்து எப்படி நகரப் போகிறது என்ற கேள்வியுடன் பலரும் இந்த சீரியல் முடிந்து விடும் என பேசி வந்தனர்.
இந்நிலையில் இந்த தொடரில் நடித்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவரான ஹேமதயாள் அன்பே வா சீரியல் முடியவில்லை. பல திருப்பங்களுடன் மீண்டும் ஜொலிக்க போகிறது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.