திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
சரவணன் மீனாட்சி என்ற பெயரையும் அதன் தீம் சாங்கையும் கேட்டவுடன் முதன் முதலில் மனதிற்கு வருவது செந்திலும், ஸ்ரீஜாவும் தான். அந்த அளவுக்கு சரவணனாகவும் மீனாட்சியாகவும் காதல் ஜோடியாக வாழ்ந்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். அதன் பிறகு சரவணன் மீனாட்சியில் பல சீசன்கள் வந்தாலும் அவை வெற்றியே அடைந்திருந்தாலும் கூட மனதுக்குள் நிலைத்து நிற்பது என்னவோ அந்த முதல் காதல் ஜோடி தான்.
நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகிவிட்ட செந்திலும் ஸ்ரீஜாவும் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் செந்தில் தனது பிறந்தநாளை கேரளாவில் இருக்கும் ஸ்ரீஜா வீட்டில் வைத்து கொண்டாடியுள்ளார். அப்போது தனது காதல் கணவருக்கு ஒரு பேப்பர் கப்பல் செய்து அதில் பூக்களை வைத்து ஸ்ரீஜா பிறந்தநாள் வாழ்த்தை அனுப்பி வைக்கிறார். இது வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவர்களிடையே நடக்கும் இந்த குறும்புத்தனமான அழகான ரொமான்ஸை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். அதே சமயம் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டுக்கொண்டிருக்க அங்கு மழைத்தண்ணீரில் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும் இருவரையும் பார்த்து இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா என கலாய்த்தும் வருகின்றனர்.