அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' | அஜித்தை மீண்டும் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் | 'வா வாத்தியார்' : இப்போது வர மாட்டார் ? | ‛குட் பேட் அக்லி' : விமர்சனங்களை மீறி முதல் நாள் வசூல் | 'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா |
இமைக்கா நொடிகள் படத்தில் தமிழுக்கு வந்த ராஷி கண்ணா, அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை-3 என பல படங்களில் நடித்தவர், தற்போது சர்தார், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் பிடித்தமான நடிகர் நடிகைகள் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, தமிழ் சினிமாவில் விஜய் தன்னை அதிகம் கவர்ந்த ஹீரோ என்று கூறியுள்ள ராசிகண்ணா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன் ஆகியோரை கூறியுள்ளார். அதேபோல் நடிகைகளில் அனுஷ்கா, சமந்தா இருவரையும் குறிப்பிட்டுள்ளார்.
வருங்கால கணவர் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நான் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவள். அதனால் என்னைப்போலவே ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவரையே திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.