வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் | மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் |

இமைக்கா நொடிகள் படத்தில் தமிழுக்கு வந்த ராஷி கண்ணா, அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை-3 என பல படங்களில் நடித்தவர், தற்போது சர்தார், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் பிடித்தமான நடிகர் நடிகைகள் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, தமிழ் சினிமாவில் விஜய் தன்னை அதிகம் கவர்ந்த ஹீரோ என்று கூறியுள்ள ராசிகண்ணா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன் ஆகியோரை கூறியுள்ளார். அதேபோல் நடிகைகளில் அனுஷ்கா, சமந்தா இருவரையும் குறிப்பிட்டுள்ளார்.
வருங்கால கணவர் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நான் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவள். அதனால் என்னைப்போலவே ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவரையே திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.




