ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் | காஷ்மீரில் அமைதியை கெடுப்பவர்களுக்கு கடும் தண்டனை : ரஜினி வேண்டுகோள் |
இமைக்கா நொடிகள் படத்தில் தமிழுக்கு வந்த ராஷி கண்ணா, அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை-3 என பல படங்களில் நடித்தவர், தற்போது சர்தார், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் பிடித்தமான நடிகர் நடிகைகள் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, தமிழ் சினிமாவில் விஜய் தன்னை அதிகம் கவர்ந்த ஹீரோ என்று கூறியுள்ள ராசிகண்ணா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன் ஆகியோரை கூறியுள்ளார். அதேபோல் நடிகைகளில் அனுஷ்கா, சமந்தா இருவரையும் குறிப்பிட்டுள்ளார்.
வருங்கால கணவர் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நான் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவள். அதனால் என்னைப்போலவே ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவரையே திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.