கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! |

'பாகுபலி' படங்களின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக உயர்ந்தவர் தெலுங்கு நடிகரான பிரபாஸ். 'ராதேஷ்யாம்' படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ், தற்போது 'ஆதி புருஷ், சலார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் படத்தில் நடிக்கப் போகிறார். அதற்கடுத்து அவர் நடிக்க உள்ள புதிய படம் பற்றிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக பிரபாஸ் வாங்கும் சம்பளம் பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது. 'ஆதி புருஷ்' படத்திற்காக பிரபாஸ் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகச் சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்தால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
ஹிந்தி வசூல் நடிகர்களான சல்மான்கான், அக்ஷ்ய் குமார் கூட அவ்வளவு சம்பளத்தை இதுவரை வாங்கியதில்லை. தென்னிந்திய அளவில் இதுவரையில் ரஜினிகாந்த் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்கிறார்கள். ஆனால், அவரை மிஞ்சும் அளவிற்கு விஜய்யின் அடுத்த பட சம்பளம் 120 கோடி என ஒரு தகவலைக் கடந்த வாரத்தில் சமூக வலைத்தளங்களில பரப்பினார்கள்.
150 கோடியே இல்லை என்றாலும் 100 கோடியாக இருந்தால் கூட தற்போது நடிக்கும் படங்கள் மூலம் 500 கோடி வரையாவது சம்பாதித்துவிடுவார் பிரபாஸ்.