வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் திருமாலின் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள். இப்போது அடுத்தடுத்து செல்கிறார்கள்.
தெலுங்கு இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில்ராஜ், நடிகை நயன்தாரா, அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன், ரஜினியின் மகள்கள், நடிகை சமந்தா உள்ளிட்ட பல செலிபிரிட்டிகள் சமீபத்தில் திருப்பதி சென்றார்கள். இந்த நிலையில் நடிகர் பிரபு தனது மகன் நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவில் இருந்து சீக்கிரம் அனைத்து மக்களும் விடுபட வேண்டும், அப்படி நடக்கும் பட்சத்தில் திருப்பதி வந்து வழிபடுவதாக வேண்டி இருந்தேன். கொரோனா சூழ்நிலை விலகி வருவதால் வேண்டுதலை நிறைவேற்ற வந்தேன். என்றார்.