ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் திருமாலின் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள். இப்போது அடுத்தடுத்து செல்கிறார்கள்.
தெலுங்கு இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில்ராஜ், நடிகை நயன்தாரா, அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன், ரஜினியின் மகள்கள், நடிகை சமந்தா உள்ளிட்ட பல செலிபிரிட்டிகள் சமீபத்தில் திருப்பதி சென்றார்கள். இந்த நிலையில் நடிகர் பிரபு தனது மகன் நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவில் இருந்து சீக்கிரம் அனைத்து மக்களும் விடுபட வேண்டும், அப்படி நடக்கும் பட்சத்தில் திருப்பதி வந்து வழிபடுவதாக வேண்டி இருந்தேன். கொரோனா சூழ்நிலை விலகி வருவதால் வேண்டுதலை நிறைவேற்ற வந்தேன். என்றார்.