அர்ஜுன், ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | புருஷன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | கென் கருணாஸின் யூத் மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது | 2026 ஜனவரியில் 22 படங்கள் ரிலீஸ் : 20 கோடி கூட லாபம் இல்லையா? | பாவனாவின் 'அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத்' பிப்ரவரி 6ல் ரிலீஸ் | பிரதீப் ரங்கநாதன் ஆக நினைக்கிறாரா அபிஷன் ஜீவிந்த் | 'ஜனநாயகன்' நிலை, இந்த வாரம் தெரிந்துவிடுமா? | ஹிந்தி பட இயக்குநர் வீட்டில் துப்பாக்கி சூடு : 5 பேர் கைது | இந்த வாரமும் 5 சிறிய படங்கள் ரிலீஸ் | சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் |

சமந்தாவும், நாகசைதன்யாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது அவர்கள் விவகாரத்திற்காக நீதிமன்றத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருப்பதாகவும் சோசியல் மீடியாக்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு பேட்டியில் நாகசைதன்யா பதிலளித்திருந்தபோதும் சமந்தா மட்டும் இன்னமும் அமைதி காத்து வருகிறார்.
இந்தநிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தான் வளர்த்து வரும் இரண்டு செல்ல நாய்க்குட்டிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. ஹாஷி- ஷாஷா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இரண்டு நாய்களும் சகோதர பாசத்துடன் பழகி வருவதாக தெரிவித்துள்ள சமந்தா, இத்தனை சீக்கிரம் இந்த இரண்டு நாய்களும் நன்றாக பழகி சேர்ந்து இருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த இரண்டு நாய்களும் சகோதர பாசத்துடன் பழகி வருவதே எனக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன். அதோடு, இந்த இரண்டு நாய்களுமே ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதாவது புதிய விசயங்களை கற்றுக்கொடுத்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார் சமந்தா.