'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
சூர்யா மற்றும் பாண்டியராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 51 நாட்கள் காரைக்குடி பகுதியில் நடைபெற்றது. இதையடுத்து தற்போது படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சூர்யா ரசிகர்கள் சிலர், அவரை சந்தித்துள்ளார். அப்போது சூர்யாவுக்கு சர்ப்ரைஸாக 'சூரரைப் போற்று' புகைப்படத்தை ஓவியமாக அளித்துள்ளனர். இதை பெற்றுக் கொண்ட சூர்யா ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் அனைத்து வசனங்களுடைய படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாகவும், மேற்கொண்டு இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்க வேண்டி உள்ளதாகவும், அந்த இரண்டு பாடல்களை சென்னை மற்றும் கோவாவில் படமாக்க இயக்குனர் பாண்டிராஜ் திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பையும் வரும் அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க தயாரிப்பு நிறுவனம், இயக்குனரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.