சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஜெய்சங்கரும் ஒருவர். இவர் பெரும்பாலும் படங்களில் அதிரடி சண்டை காட்சிகள், துப்பறியும் அதிகாரி, சிபிஐ ஆபிசர் போன்ற வேடங்களில் நடித்திருப்பார். எனவே இவரை தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என்றும் ரசிகர்கள் அழைத்து வந்தார்கள்.
ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் விஜய் சங்கர். இவர் கண் மருத்துவராக உள்ளார். இளைய மகன் சஞ்சய் சங்கர். இவர் நிறுவனம் ஒன்றை வருகிறார். சஞ்சய் சங்கர் இசை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தொழிலதிபர் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.