22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்தும் விஜய்க்கு ஒரு கதை சொன்னார். அந்த கதை விஜய்க்கு திருப்தி கொடுக்காமல் போனதால் அவர்கள் மீண்டும் இணையவில்லை. அதன்பிறகுதான் விஜய்யின் 65ஆவது படவாய்ப்பு நெல்சனுக்கு சென்றது.
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது ஜூராசிக் பார்க் பட ஸ்டைலில் ஹாலிவுட் பாணியில் குரங்கை மையமாக வைத்து அவர் ஒரு படத்தை எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரப்பரில் செய்த விலங்குகளை வைத்து, அந்த படத்தை அனிமெட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் எடுத்தது போலவே முருகதாசும் தனது புதிய படத்தை அதேபோன்ற ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் எடுக்கப்போகிறாராம். இந்த படத்தை டில்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.