எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு ஒரு மாதத்திற்கு முன் ஆகஸ்ட் 23ம் தேதி தமிழ்நாட்டில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்பிறகு வந்த முதல் வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 28ம் தேதி, அதற்கடுத்து செப்டம்பர் 3ம் தேதியும் எந்த ஒரு புதிய படமும் வெளியாகவில்லை. செப்டம்பர் 9ம் தேதி 'லாபம்', 10ம் தேதி 'தலைவி', 17ம் தேதி 'கோடியில் ஒருவன், பிரண்ட்ஷிப்' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளிவந்தன. கடந்த ஒரு மாதத்தில் அதிக பட்சமாக கடந்த வாரம் மட்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானது.
ஆனால், நாளை மறுதினம் செப்டம்பர் 24ம் தேதி ''பிளான் பண்ணி பண்ணனும், சூ மந்திரக்காளி, பேய் மாமா, வீராபுரம், சின்னஞ்சிறு கிளியே, பிறர் தர வாரா, சிண்ட்ரல்லா” ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இவற்றில் ஏதாவது ஒரு மாற்றம் கடைசி நேரத்தில் ஏற்படலாம்.
இருப்பினும், இரண்டாவது அலைக்குப் பிறகு ஒரே வாரத்தில் இத்தனை படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளது திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சி தான். ஆனால், மக்கள் தான் தியேட்டர்கள் பக்கம் இன்னும் அதிகமாக வரத் தயங்குகிறார்கள்.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் சில பெரிய படங்கள் வர உள்ளதால் அப்போது தியேட்டர்கள் கிடைக்க பிரச்சினையாக இருக்கும். அதனால், இந்த வாரம் இத்தனை படங்கள் வெளிவருதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள்.