2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

கொரோனா முதல் அலை முடிந்து அனைவரும் சற்று ரிலாக்ஸ் ஆவதற்கு முன்பே தொடர்ந்து இரண்டாவது அலையும் ஆதிக்கம் செலுத்தியதால் மக்களின் வாழ்க்கை முறையே மாறி போனதோடு, வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழலும் ஏற்பட்டது. திரையுலக பிரபலங்களும் படப்பிடிப்பு, பார்ட்டிகள், சுற்றுலா என எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். தற்போது கொரோனா இரண்டாவது அலை முடிந்து ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இதையடுத்து கொரோனா இரண்டாவது அலையின் போது பார்சிலோனா நகரத்தில் மாட்டிக்கொண்ட நடிகை ஸ்ரேயா மற்றும் அவரது கணவர் இருவரும் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர். வந்தவுடனே நண்பர்களுடன் பார்ட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்த ஸ்ரேயா அதை தொடர்ந்து திருப்பதி கோவிலுக்கு தனது கணவர் மற்றும் குடும்பத்தாருடன் சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார். ஸ்ரேயாவுடன் அவரது ரஷ்ய கணவரும் இந்து பாரம்பரிய முறைப்படி உடையணிந்து கோவிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.




