நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ஆர்சி15 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், ஆர்ஆர்ஆர் மற்றும் ஆச்சார்யா படங்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கெண்டு வருகிறாராம் ராம்சரண். காரணம், தனது படத்தில் நடிக்க வந்தபிறகு படப்பிடிப்பு முடியும்வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று ராம்சரணுக்கு கண்டிசன் போட்டுள்ளாராம் ஷங்கர்.
அதன்காரணமாகவே ஏற்கனவே நடித்துவந்த இரண்டு படங்களின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்து விட்டு அதன்பிறகு ஷங்கர் இயக்கும் படத்தில் மட்டுமே முழுக்கவனம் செலுத்தி நடிக்க திட்டமிட்டுள்ள ராம்சரண், புதிதாக தான் நடிக்கயிருந்த இன்னொரு தெலுங்கு படத்தையும் தள்ளி வைத்து விட்டாராம்.
இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தை குறுகிய காலத்தில் படமாக்கி முடித்து விட்டு அடுத்த ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதால் ராம்சரண் மட்டுமின்றி, இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளுக்கும் இதே கண்டிசனை போட்டுள்ளாராம் ஷங்கர்.