துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜெயராம், சந்தானம், பிரகாஷ்ராஜ், வைபவ், எஸ்பி சரண், சிவா, பிரேம்ஜி, வேகா மற்றும் பலர் நடிப்பில் 2008ம் ஆண்டு வெளிவந்த படம் 'சரோஜா'.
'சென்னை 28' படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கிய இரண்டாவது படம். ஒரு பயணக் கதையாக அமைந்த படம் அன்றைய இளம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
அந்தப் படம் பற்றி ஒரு ரசிகர் தற்போது எக்ஸ் தளத்தில், “சும்மா…'சரோஜா' சீன்ஸ் பாத்துக்கிட்டு இருந்தேன், அப்போ தான் இத நோட் பண்ணேன். படம் புல்லா நைட்ல நடக்கும், ஆனா, டைம் ல மதியானம் 12 மணி போட்ருக்கு,” என்று பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவிற்கு வெங்கட் பிரபு, நகைச்சுவை நடிகர் செந்தில் சிரிக்கும் ரியாக்ஷன் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். மற்றொரு ரசிகர் அதைப் பகிர்ந்ததற்கு, “ரிலீஸ் ஆன போதே கண்டுபிடிச்சிருந்தா, கோல்டு காயின் கொடுத்திருக்கலாம். சே…18 வருஷம் கழிச்சிங்கறதால…,” என கமெண்ட் செய்துள்ளார்.
இந்தப் படம் டிவியில் பல முறை ஒளிபரப்பப்பட்டுள்ளது, ஓடிடி தளத்தில் உள்ளது. அப்போதெல்லாம் யாரும் கண்டுபிடிக்காத ஒரு விஷயத்தை இப்போது ஒரு ரசிகர் கண்டுபிடித்திருப்பதும், அந்தத் தவறை வெங்கட் பிரபுவும் ஏற்றுக் கொண்டிருப்பதும் அதிசயமல்ல உண்மை.