வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை | உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி | மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் |

மலையாளத்தில் பிரேமம் என்கிற ஹிட் படத்தையும், நஸ்ரியா, சாய் பல்லவி உள்ளிட்ட நான்கு கதாநாயகிகளையும் திரையுலகுக்கு கொடுத்தவர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தனது மூன்றாவது படத்தை இயக்குகிறார். பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார், இந்த படத்தை பிரித்விராஜ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்வில் பிரித்விராஜ், நயன்தாரா இருவருமே கலந்து கொள்ளவில்லை என்றாலும், பிரித்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாரன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக அல்போன்ஸ் புத்ரன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பஹத் பாசில் ஆகியோரை வைத்து படங்கள் இயக்குவதாக சொல்லப்பட்டு அது வெறும் பேச்சாகவே போய்விட்ட நிலையில், தற்போது பிரித்விராஜை வைத்து இவர் இயக்கும் படம் அதிகாரப்பூர்வமாக பூஜையுடன் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.