பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை | எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா |

'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோ தமிழ், தெலுங்கில் ஒரே ஆண்டில் 2017ம் ஆண்டு ஆரம்பமானது. தெலுங்கில் முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி ஆகியோர் தொகுத்து வழங்கினர். கடந்த மூன்றாவது, நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். இந்த வருடத்தின் ஐந்தாவது சீசனையும் நாகார்ஜுனாவே தொகுத்து வழங்குகிறார்.
நாளை செப்டம்பர் 5 மாலை 6 மணிக்கு இந்த 5வது சீசனின் முதல் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. நாளை பங்கேற்கும் போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஒளிபரப்பாக உள்ளது. அதன்பின் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9 மணிக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். கடந்த நான்காவது சீசன் அதிகப் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ரேட்டிங்கிலும் சாதனை படைத்துள்ளது. அதை முறியடிக்கும் விதத்தில் ஐந்தாவது சீசனை உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்த சீசன் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நாகார்ஜுனா, “ரசிகர்களுக்கும் நேயர்களுக்கும் மகிழ்ச்சியுடன், சிறந்த பொழுதுபோக்கைத் தருவதே எங்களது நோக்கம். ஒரு கலைஞனாக, போட்டியாளர்களின் உண்மையான உணர்வுகளை எடுத்துச் செல்ல எதிர்நோக்கியுள்ளேன். அதன் மூலம் டிவி பார்க்கும் நேயர்களும் அதைப் புரிந்து கொள்ள முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் கடும் போட்டியும், சண்டையும் தெலுங்கு பிக் பாஸில் இருந்தது. இந்த ஆண்டும் அதே அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




