இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தெலுங்குத் திரையுலகத்தில் போதைப் பொருள் பயன்பாடு குறித்து 2017ல் எழுந்த சர்ச்சை, விசாரணை வளையத்தில் 12 சினிமா பிரபலங்கள் சிக்கியுள்ளனர். அவர்களை அடுத்தடுத்து அமலாக்கப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்து விசாரித்து வருகின்றனர்.
இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகை சார்மி ஆகியோரைத் தொடர்ந்து நேற்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரணை நடந்துள்ளது. அப்போது அவரிடம் 30 கேள்விகளை அமலாக்கப் பிரிவினர் கேட்டுள்ளனர்.
ரகுல் ப்ரீத் சிங், எப்-45 என்ற ஜிம் ஒன்றை நடத்தி வருகிறாராம். அந்த ஜிம்முக்கும் போதைப் பொருள் வழக்கியில் சிக்கியுள்ள முக்கிய குற்றவாளியான கால்வின் என்பவருக்கும் இடையே பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாம். மேலும், எப்-கிளப் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த பார்ட்டியில் கால்வின் போதைப் பொருளை சப்ளை செய்தது குறித்த சிசிடிவி வீடியோ ஆதாரங்களுடன் தான் ரகுல் ப்ரீத் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக நடந்து வரும் இந்த விசாரணை விவகாரத்தில் தெலுங்குத் திரையுலகத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் மேலும் சில பிரபலங்கள் விசாரிக்கப்பட உள்ளனர்.