‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த ஷங்கர், தயாரிப்பு நிறுவனம் லைகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அப்படத்தை கைவிட்டு தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் கொரியன் சிங்கர் சூஷி பே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதோடு, படத்தில் நாயகியாக அலியாபட், கியாரா அத்வானி , மாளவிகா மோகனன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியா முழுவதும் படம் வெளியாக இருப்பதால் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரிட்சயமான நாயகியாக வேண்டுமென படக்குழு விரும்பியது. இறுதியாக, க்யாரா அத்வானி நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
கூடுதலாக, இன்னொரு நாயகியும் படம் இருக்கிறார். முதலில், இந்த வேடத்துக்கு தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இப்போதைக்கு, தெலுங்கின் முன்னணி நடிகையான இவரை, ஷங்கர் படத்தில் நடிக்க வைக்க விரும்பினார்கள். ஆனால், பெரும் தொகையை சம்பளமாகக் கேட்டிருக்கிறார் ராஷ்மிகா. அதோடு, சில கட்டுப்பாடுகளும் போட்டதாகத் தெரிகிறது. இதனால், ராஷ்மிகாவை நிராகரித்து விட்டாராம் ஷங்கர்.பின்னர், ராஷ்மிகா ரோலுக்கு நடிகை அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.