பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

கடந்த 2019ல் இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான திகில் திரைப்படம் 'காஞ்சனா 3'. இந்த படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி மற்றும் அலெக்சாண்ட்ரா ஜாவி என நான்கு கதாநாயகிகள் நடித்திருந்தனர். இதில் ரோசி எனும் கதாபாத்திரத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்திருந்தவர் அலெக்ஸாண்ட்ரா.
ரஷ்ய நாட்டு மாடல் நடிகையான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து அந்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன்பிறகு கோவாவிற்கு சென்ற அவர், அங்கு ஒரு வீட்டை வாடகை எடுத்து வசித்து வந்தார். தனது காதலருடன் வசித்து வந்த அவர், நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலைக் கொண்டுள்ளார். அலெக்ஸாண்ட்ரா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.