மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

ஏ.ஆர்.ரகுமான் கதை மற்றும் பாடல்கள் எழுதி, இசை அமைத்து, தயாரித்த படம் 99 சாங்ஸ். இந்த படம் நாளை (ஆகஸ்ட் 22 ) கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிற்பகல் 1.00 மற்றும் மாலை 4.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தான் நேசிக்கின்ற பெண்ணை திருமணம் செய்வதற்கு முன்பு, 100 பாடல்களை பாட வேண்டும் என்ற பெண்ணின சவாலை ஏற்று அதற்காக பல சிரமங்களை அனுபவித்து சாவலில் வெற்றி பெறும் இளைஞனின் கதை. பென்னி தயாள், ஸ்வேதா மோகன், அரிஜித் சிங் உட்பட, பல பிரபல இந்திய இசை உலக நட்சத்திரங்கள் இதில் பாடி இருக்கிறார்கள்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியிருப்பதாவது: எனது திரைப்படமான 99 சாங்ஸ் , கலர்ஸ் தமிழ் போன்ற தமிழகத்தின் பிரபல சேனலில் ஒளிபரப்பப்படவிருக்கிறது என்று அறிந்து நான் மிகவும் உற்சாகமும், ஆனந்தமும் கொண்டிருக்கிறேன். தயாரிப்பில் எனது முதல் திரைப்படமாக இது இருப்பதால், பார்வையாளர்களும், ரசிகர்களும் இந்த திரைப்படமாக்கல் அனுபவத்தை எந்த அளவிற்கு அனுபவித்து ரசிக்கவிருக்கின்றனர் என்று அறிய மிகவும் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்போடும் நான் இருக்கிறேன்.
இந்த படத்திற்கான பாடல்களை எழுதியது ஒரு இசைக்கலைஞராக எனது இசை திறனை மேலும் உயர்த்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவியிருக்கிறது. இத்திரைப்படத்தை ரசித்து, அனுபவிப்பதோடு, இப்பாடல்களின் இசையையும் உணர்ந்து இனிய அனுபவம் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். என்று கூறினார்.




