ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
மைக்கேல் ராயப்பன் தயாரித்த ‛அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்ததில் இருந்தே சிம்புவுடன் அவருக்கு மோதல் வெடித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது கவுதம்மேனன் இயக்கும் ‛வெந்து தணிந்தது காடு' படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படம் தொடங்கப்பட்டதில் இருந்தே பெப்ஸிக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்குமிடையே பிரச்னை வெடித்துள்ளது.
இந்தநேரத்தில் சிம்புவின் தாயாரான உஷா ராஜேந்தர், தனது மகன் சிம்புவுக்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இன்னும் ரூ.3.50 கோடி சம்பள பாக்கி தர வேண்டியுள்ளதாக ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து மைக்கேல் ராயப்பன், ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், ரூ.3.50 கோடி சம்பளம் தர வேண்டும் என்று உஷா ராஜேந்தர் சொல்வது அப்பட்டமான பொய் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிம்பு எனக்கு இன்னொரு படத்தில் நடித்து தரவேண்டுமென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட சொன்னேன். அதற்காகத்தான் நான் ரூ.75 லட்சம் தருவதாக கூறியிருந்தேன். ஆனால் இப்போதுவரை சிம்பு அந்த ஒப்பந்ததை என்னிடம் தரவில்லை. மேலும் நான் அவர்களுக்கு கொடுத்த ஒரு செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. அதற்கு அடுத்த நாள் அதே தொகைக்கான டிடி எடுத்து அவர்களுக்கு கொடுத்து விட்டேன். ஆனால் இப்போதுவரை அந்த செக்கை அவர்கள் என்னிடம் திருப்பித்தரவில்லை என்றும் சிம்பு மீதான தனது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.