நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சோசியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வந்த நடிகை மீரா மிதுன், சமீபத்தில் பட்டியலினத்தவரை தவறாக சித்தரித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அதையடுத்து விசிக.,வின் வன்னி அரசு அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அதையடுத்து மீரா மிதுன் மீது 7 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் அவரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால் மீரா மிதுனோ அதை ஏற்காமல், என்னை யாரும் கைது செய்ய முடியாது என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.
இந்தநிலையில், தலைமறைவான மீராமிதுனை சைபர்கிரைம் போலீசார் கேரளாவில் நேற்று (ஆக.,14) கைது செய்தனர். அவரை கைது செய்யச் சென்றபோதும் போலீசாரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த மீராமிதுனை பெண் போலீசார் மடக்கி கைது செய்துள்ளனர். இந்நிலையில், மீரா மிதுன் கைது குறித்து அவரது சக பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை சனம் ஷெட்டி தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக நாங்கள் சகித்துக் கொண்டு வந்த அனைத்து வெறுக்கத்தக்க பேச்சுக்களும் இனிமேல் முடிவுக்கு வந்து விடும் என்று பதிவிட்டுள்ளார்.