'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான படம் 'ஆர்ஆர்ஆர்'. சுதந்திர போராட்ட காலத்து கதையாக உருவாகி வரும் இப்படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அக்டோபர் 13ம் தேதியன்று வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது அதில் மாற்றம் வரும் என்ற தகவல் பரவியுள்ளது.
படத்தை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களில் தியேட்டர்களைத் திறக்கவில்லை. வெளி நாடுகளில் திறக்கப்பட்ட தியேட்டர்களுக்கும் மக்கள் அதிகம் வரவில்லை. எனவே, படத்தை சில மாதங்கள் தள்ளி வைக்கலாம் என முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வருட டிசம்பர் மாதத்திற்கு ஏற்கெனவே சில தெலுங்குப் படங்களை வெளியிட உள்ளார்கள். அதனால், அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிடலாம் என்றும் தெரிகிறது.
இது குறித்த முறையான அறிவிப்பை படக்குழு உக்ரைன் நாட்டு படப்பிடிப்பிலிருந்து இந்தியா திரும்பி வந்ததும் அறிவிக்கலாம் என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.