இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் ஏழு வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் சந்தானம். தானும் நாயகனாக மாற வேண்டும் என 2014ல் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தை சொந்தமாகத் தயாரித்து நாயகனாக நடித்தார். அந்தப் படமும் அடுத்து வெளிவந்த 'இனிமே இப்படித்தான்' படமும் வெற்றி பெறவில்லை. ஆனாலும், 2016ல் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' படம் சந்தானத்தைக் காப்பாற்றியது.
2015ம் ஆண்டிலேயே சந்தானம் நாயகனாக நடிக்க ஆரம்பமான படம் 'சர்வர் சுந்தரம்'. 2016லேயே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2017ல் படத்தை வெளியிட திட்டமிட்டார்கள். அதன்பின் பல முறை படத்தின் வெளியீட்டை அறிவித்தாலும் இதுவரையிலும் படம் வெளியாகவில்லை. அதன்பின் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்தும் அதுவும் நடக்கவில்லை. இப்போது மீண்டும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
மேலும், சந்தானம் நாயகனாக நடித்துள்ள மற்றொரு படமான 'டிக்கிலோனா' படத்தையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்தப் படமும் கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய படம். சில பால காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. கார்த்திக் யோகி இயக்கத்தில் யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் அனகா, ஷெரின் கான்ச்வாலா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். சீரியஸ் படங்களாகவே ஓடிடியில் வந்து கொண்டிருக்கும் நிலையில், சந்தானத்தின் இரண்டு படங்களும் அடுத்தடுத்து ஓடிடியில் வருவது கொஞ்சம் மாற்றமாகத்தான் இருக்கும்.