சிம்பு படத்தில் மிருணாள் தாக்கூர் சந்தானம் | திலீப் படத்தை இயக்குகிறேனா? 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் மறுப்பு | 'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதியில் தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? |

அண்ணாத்த, நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்துவிட்ட நயன்தாரா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அவர் நடித்துள்ள நெற்றிக்கண் படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும், தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழா மற்றும் மீடியா பிரமோஷன்களில் கலந்து கொள்ளாத நயன்தாரா, பத்திரிகை மற்றும் மீடியா பேட்டிகளையும் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவரை விஜய் டிவிக்காக ஒரு பேட்டி எடுத்துள்ளார் திவ்யதர்ஷினி. இந்த பேட்டி ஆகஸ்ட் 15-ந்தேதி ஒளிபரப்பாக உள்ளது. அந்த பேட்டியின் பிரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், தனக்கும் டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதை உறுதிபடுத்தியுள்ள நயன்தாரா, விக்னேஷ்சிவனிடம் அனைத்து விசயங்களுமே தனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவ்வப்போது நெருக்கமாக எடுத்த செல்பி போட்டோக்களை பதிவிட்டும் வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா கொச்சி சென்றபோது அங்கு நிச்சயதார்த்தம் எளிய முறையில் நடந்ததாக கூறப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




