சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
அண்ணாத்த, நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்துவிட்ட நயன்தாரா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அவர் நடித்துள்ள நெற்றிக்கண் படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும், தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழா மற்றும் மீடியா பிரமோஷன்களில் கலந்து கொள்ளாத நயன்தாரா, பத்திரிகை மற்றும் மீடியா பேட்டிகளையும் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவரை விஜய் டிவிக்காக ஒரு பேட்டி எடுத்துள்ளார் திவ்யதர்ஷினி. இந்த பேட்டி ஆகஸ்ட் 15-ந்தேதி ஒளிபரப்பாக உள்ளது. அந்த பேட்டியின் பிரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், தனக்கும் டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதை உறுதிபடுத்தியுள்ள நயன்தாரா, விக்னேஷ்சிவனிடம் அனைத்து விசயங்களுமே தனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவ்வப்போது நெருக்கமாக எடுத்த செல்பி போட்டோக்களை பதிவிட்டும் வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா கொச்சி சென்றபோது அங்கு நிச்சயதார்த்தம் எளிய முறையில் நடந்ததாக கூறப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.